Monday, October 20, 2008

கட்டுரை விழிப்பு.நெட் லிருந்து

கம்ப்யூட்டர்களில் இருந்து கண்ணை காப்பது எப்படி?

தற்கால மனிதனின் இயந்திர வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்படும் உறுப்பு கண் தான். கம்ப்யூட்டர் எப்படி நம் வாழ்வோடு இணைந்து விட்டதோ அவ்வாறு நம் கண்ணிற்கு கேடு தரும் விஷயமாகவும் அது அமைந்து விட்டது. ஆனால் இனி கம்ப்யூட்டரை நம்மால் தவிர்க்க முடியாது. எனவே எந்த அளவிற்கு கண்ணை பாதிக்காமல் கம்ப்யூட்டரை நாம் பயன் படுத்தலாம் என தெரிந்து கொள்ள வேண்டும். கண் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் பழமையான மருத்துவமான ஆயுர்வேதத்தில் "சாலக்கிரந்தம்' என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.

பக்கவிளைவு இல்லாத ஆயுர்வேத முறையில் கண் சிகிச்சை அளிக்கும் கேரளாவின் ஸ்ரீதரீயம் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய டாக்டர்கள் என்.பி.பி.நம்பூதிரி, நாராயணன் நம்பூதிரி கூறியதாவது: தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பார்ப்பவர்கள், புகை நிறைந்த ரோட்டில் ஹெல்மெட், கூலிங் கிளாஸ் இல்லாமல் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு கண்நோய் வர 80 சதவீத வாய்ப்புகள் அதிகம். கம்ப்யூட்டரை விட "டிவி'யின் பாதிப்பு அதிகம். இவற்றை தொடர்ச்சியாக பார்ப்பதால் உடனடி களைப்பு அடைவது நமது கண்கள் மட்டுமே. கம்ப்யூட்டர் மானிட்டரின் கதிர்வீச்சால் கண் வறட்சியடைகிறது. சராசரியாக நமது இமைகள் ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 30 முறை வரை சிமிட்டுகிறது. ஆனால் கம்ப்யூட்டர் மானிட்டரை நாம் உற்றுநோக்கி கொண்டு இருக்கும் போது ஒரு நிமிடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையே கண் சிமிட்டுகிறோம்.

இப்படி இமைகளை அசைக்காமல் பார்ப்பது தவறு. அரைமணி நேரத்திற்கு ஒருமுறை கம்ப்யூட்டரில் இருந்து கண்களை விலக்கி தூரத்தில் எங்காவது பார்க்க வேண்டும். கருவிழியை கண்ணின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று பயிற்சி செய்ய வேண்டும். இமையை அசைக்க வேண்டும். தினமும் நான்கு முறையாவது சுத்தநீரில் கண்ணை கழுவ வேண்டும். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சில நிமிடங்கள் கண்ணை மூடியபடி அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். இமைப்பகுதிகளை வருடி லேசாக "மசாஜ்' செய்யலாம். கம்ப்யூட்டர்களில் எல்.சி.டி., டி.எப்.டி., மானிட்டர்களை பயன்படுத்தினால் கதிர்வீச்சு அபாயம் குறைவாக இருக்கும். "டிவி'யை தொலைவில் வைத்து பார்க்கவும். கீறல் விழுந்த கண் கண்ணாடிகளை பயன்படுத்த கூடாது. வீடுகளில் விளக்குகளின் வெளிச்சம் குறைவாக இருப்பது நல்லது. சி.எப்.எல்., பல்புகள் நல்லது. சிறுவர்கள் மேஜை விளக்குகளை பயன்படுத்தி படிக்க கூடாது. கீரை வகைகள், காய்கறிகளை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது. இவ்வாறு கூறினர்.

கண்ணிற்கு மை அழகு:

* கண்ணிற்கு மை எழுதும் போது மோதிர விரல் நுனியால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கைநகம் படாமல் வரைய வேண்டும். குழந்தைகளுக்கு பிறந்த 15 நாளில் இருந்து மை எழுதலாம். ஒன்றரை மாதத்தில் கை, கால் நகங்களை வெட்டி விட வேண்டும். இல்லையேல் நகங்களால் கண்ணை கசக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகள் கண்ணில் ஊதி தூசியை எடுக்க கூடாது. கையால் தொடாமல் தூயநீரால் கண்ணை கழுவினால் போதும்.
* குழந்தைகள் பிறந்து இரண்டு மாதத்தில் கண்பார்வை பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிறமுடைய விளையாட்டு பொருட்களை அவர்கள் பார்வையில் படும்படி வைத்து குழந்தை அதனை தொடுகிறதா என பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment