Monday, August 4, 2008

அனிச்சம்


அனிச்சம் என்று திருக்குறளில் கூறப்பட்டுள்ள மலர் இதுவே !




இதன் தாவரவியல் பெயர் Anagallis arvensis.

இதன் வழக்கு பெயர் scarlet pimpernel
மேலும் தகவல்கள்

சங்க இலக்கிய தாவரங்கள் (நன்றி: நிலாச்சாரல்.காம்)
siddhadreams.blogspot.com

Friday, August 1, 2008

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்திட்டம்


மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். மே 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் தலைவராக சுவிட்சர்லாந்தில் இருக்கும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் என்பவரும் துணைத்தலைவராக அமெரிக்காவிலுள்ள முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் என்பவரும் உள்ளனர். எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்லும் ஒரு கூட்டு முயற்சியே மதுரைத் திட்டமாகும்.

மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி,மயிலை தமிழ் எழுத்துருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர(TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் இலவசமாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறையில் தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்ட இணையதளம்

ஜூன் 2007 வரை வெளியிடப்பட்ட மின்பதிப்புகளின் அகரவரிசைப்பட்டியல்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்



ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 1994ல் நிறுவப்பட்ட ஓர் ஒப்பற்ற நூலகம். இந்த நூலகம் 19 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வரையிலான காலப்பகுதியில் வெளியான 100,000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களும், பிற எழுத்து வடிவங்களும் கொண்ட ஓர் அரிய நூலகம். கோட்டையூரில் இருந்த ரோஜா முத்தையா என்பார் 1950களில் நூல்களை சேர்க்கத் தொடங்கி தம் வாழ்க்கையை நூற்களை தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்பணித்து 1992ல் மறைந்தார். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கலகத்தார் பெருமுயற்சி எடுத்து, இன்று உலகில் உள்ள தமிழ் ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயன் தருமாறு, இந்நூலகத்தை நிறுவ பெரிதும் துணைபுரிந்தனர். மேற்குலகுக்கு தமிழை ஆழமாக அறிமுகம் செய்த ஏ.கே ராமானுஜம் அவர்கள் புத்தகத்தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது. இந்நூலகம் தமிழ்நாட்டில், சென்னையில் அடையாறுக்கு அருகே தரமணியில் உள்ளது. வேறு எந்த இந்திய மொழிகளிலுமோ அல்லது உலகமொழிகளிலுமோ இச்சிறு காலப்பகுதிக்கான ஆக்கங்களை இத்தனை நேர்த்தியாக இத்தனை எண்ணிக்கை கொண்ட நூல்களும் எழுத்துக்களும் சேர்ந்த தொகுப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகின்றது.

இந்நூலகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புத்தகங்களை நகல் எடுத்தும், microfilming செய்தும் தரும் வசதி உள்ளது. மேலும் 10000 க்கும் மேற்பட்ட நூல்கள் microfilming செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

அவ்வப்போது கருத்துரைகள், சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
Roja Muthaiah Research Library (RMRL)
செல்ல

இந்நூலகம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள


ரோஜா முத்தையா பற்றி கடாரத்தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி எழுதிய கட்டுரைகள்

இந்நூலகத்திற்கு செல்ல வரைபடம்