Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, July 30, 2012

நானும் ரவுடி தான்!


வாழ்ந்திருப்பதற்கான தேவையின் காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கும்
பொழுதினில் அவசர அவசரமாக விடிந்து விடுகின்றது.

எதிர்பார்ப்புகள் சருகாய் மிதிபடுகின்ற வெளியினில்
வெகுதூரம் சென்றுவிட்டிருக்கிறேன்.

அந்த மயக்கும் பழுப்பு நிற மேகத்தைத் தொட்டுவிட தினமும் முயல்கிறேன்
அதனுள்ளேயே சென்றுவிட எத்தனிக்கிறேன்

எங்கெங்கும் பழுப்பு நிறம்..
திசைகளும் தேவைகளுக்கான தேவைகளும் இல்லை

தேடல்கள் இல்லை, தெய்வமும் தேவையில்லை
அன்பும் இல்லை, அருவருப்பும் இங்கில்லை

Wednesday, July 11, 2012

மிஸ் பண்ணிட்ட மச்சி...!

மழைபெய்து ஓய்ந்திருந்த இரவில்
சன்னல்வழி இருட்டினூடே
என் வெற்றுடம்பின் மேல்
வந்து விழுகிறது அது

சில்லென்று ஏதோ பட்டதில்
மெய் சிலிர்த்து கையிலெடுத்துப் பார்க்கிறேன்
ஓர்  ஈசல்!

சற்றே கணத்தில் இரண்டு மூன்று நான்கென
வந்து விழுந்து பெருகுகின்றன அறைக்குள்

Tuesday, November 15, 2011

ஜன்னலோர இருக்கை




ஜன்னலோர இருக்கை 

“சின்ன பையன், அவன் உட்காரட்டும்”
ஜன்னல்சீட்டுக்கு அடம் பிடித்த தம்பிக்கு
அம்மாவின் பரிந்துரையில் சீட் கிடைத்தது

ஓசியில போறவனுக்கு எதுக்கு சீட்டு?
பள்ளிக்கு செல்லும் போது நடத்துனர் தயவில்
அரசு பேருந்திலும் அமர்ந்ததில்லை.

விமானத்தில், ரயில் பயணங்களில்
எப்போதும் ஒரு நடுத்தர வயதுடையவர்
ஜன்னலில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருப்பார்.

Saturday, September 10, 2011

குலாப் ஜாமூன் சாப்பிடும் போது…

குலாப் ஜாமூன் சாப்பிடும் போது “குலாப்”ன்னா ரோஜா, இந்த ஜாமூன்ங்கிறது இன்னாபா? என்ற கேள்வி தோன்றியது. ரூம் போட்டு யோசித்ததில் ஒன்றும் பிடிபடாமல் பக்கத்து ரூம் சர்தார்ஜியைக் கேட்டேன்.

“ஏ ஜாமூன் க்யா ஹோதா ஹே சார்?” அடுத்த நாள் வாங்கிக் கொண்டு வந்தார்.

ஓஹோ! இதுதான் ஜாமுனா? என்று நினைக்கும்போதே நாவல் பழத்தின் “ஓஹோ!” சொல்லவைக்கும் சுவையும், மருத்துவ குணங்களும் நினைவில் வந்தன.

Wednesday, September 7, 2011

சாப்பிட வாங்க!



ஸ்ரீ நியூ டில்லி மெஸ்
(அசுத்த சைவம்)

இவ்விடம் சகலவிதமான சவுத் இண்டியன் சாப்பாடு, டிபன், இத்யாதி சித்ரான்னங்களும் காபி, டீ, வகையராக்களும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை சூடாகவும், நல்ல ருசியாகவும் (?) சுத்தமாகவும் (??) சகாய விலையிலும் கிடைக்கும்.

(தஞ்சாவூர் சீவல் மற்றும் கற்பூர வெற்றிலை கிடைக்கும்)
(கண்டிப்பாக அக்கவுண்ட் கிடையாது)

இன்றைய ஸ்பெஷல்!

புளியோதரை
ரச சாதம்
 டில்லி அப்பளம்

பின்குறிப்பு:

சமையல் மாஸ்டர் அரிசியை உலையில் போட்டுவிட்டு சற்று கண் அசந்துவிட்டபடியால், சாதம் இலேசாக (?) மாநிறமாகிவிட்டது அதனை புளியோதரையில் கலந்து விட்டோமென்று வாடிக்கையாளர்கள் தவறாகக் கருத வேண்டாமென்று சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறோம். புளியோதரையில் அடிக்கும் கருகிய வாசனை இதனால்  அல்லவென்றும் தெரிவிக்கிறோம்.

(தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள படங்களை பார்வையிடும்படி பிரஸ்தாபிக்கிறோம்)

இப்படிக்கு- ஸ்ரீ நியூ டில்லி மெஸ் நிறுவனத்தார், நெ. 71/2, மேஸ்திரி சங்கரஞ்செட்டியார் வீதி, ஜனக்புரி, புது டில்லி-35 
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

(வேலை காலி இல்லை)


படங்கள் அனைத்தும் இண்டியன் காப்பிரைட் ஆக்டின் (கி.மு1932) கீழ் ரிஜிஸ்டர் செய்திருப்பதால் பிரஸ்காரர்கள் படங்களை முன் அனுமதியின்றி பதிபித்தலாகாதென்று இதன்மூலம் (கண்டிப்பாக) தெரிவிக்கப்படுகிறது.