Wednesday, February 2, 2011

அழிவின் விளிம்பில் தொன்மங்கள்


நேர்காணல்: சுகவன முருகன்
கிருஷ்ணகிரி பகுதி: ஆதிக்குடிகளின் நிலம் அறியப்படாத வளம்

"புது எழுத்து' மனோன்மணி என்று இலக்கிய உலகில் அறியப்படுகிற சுகவன முருகன்,கவிஞர். அவரது "கலவரம்' கவிதைத் தொகுப்பு பரவலாகக் கவனம் பெற்றது.கருவூலத்துறை பணியிலிருந்து விலகி ஆசிரியப்பணியை விரும்பி ஏற்றுள்ளவர்.வடதமிழகத்தின், குறிப்பாக கிருஷ்ணகிரி பகுதியிலுள்ள தொல்லியல் வளங்களைத்தேடித்தேடி கண்டடைவதில் பேரார்வம் கொண்டவர். தொல்லியல் சான்றுகளின்சுரங்கம் போன்றிருக்கும் இப்பகுதியின் காடுகளும் மலைகளும் கனிமவளங்களெனஆட்சியாளர்களால் தவறுதலாகப் பொருள்மாற்றம் கொள்ளப்பட்டு கிரானைட்பாளச்சில்லுகளாக சிதறடிக்கப்படும் அழிவு குறித்த அவரது பெருந்துயரம்இந்தச்சமூகம் முழுவதற்குமானது. கலை இலக்கியம், புது எழுத்து பத்திரிகை மற்றும்நூல் வெளியீடுகள், எழுத்தாளர்களுடனான தொடர்புகள், அவர்களது ஆக்கங்கள் மீதானவிமர்சனம், சமகால நடப்புகள், கல்வி என்று மனோன்மணியிடம் நிகழ்த்திய மிகவிரிவான உரையாடலின் சிறுபகுதி மட்டுமே இது. தனது புகைப்படத்திற்குப் பதிலாகதான் பெரிதும் நேசிக்கும் தொல்லியல் சான்றுகளின் படம் ஒன்று கூடுதலாக வெளியிடப்படுவதையே 
விரும்புகிறவராயிருக்கிறார் மனோன்மணி. - புதுவிசை 

புதுவிசை:தொல்லியலில் உங்களுக்கு எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?

சுகவன முருகன்: அப்பாவுக்கு வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு. கல்லூரிப் படிப்புமுடித்திருந்த சமயத்தில் கடத்தூர் புது. பொ. வெங்கட் ராமன், காவேரிப்பட்டிணம். துரைசாமி மற்றும் கிருஷ்ணகிரி நிசாதுதீன் அகமது ஆகிய மூன்று தொல்லியல்அறிஞர்களுடன் தொடர்பு ஏற்பட் டது. திரு. புது.பொ. வெங்கட்ராமன் தமிழாசிரியராக பணியாற்றியவர். சேலம் அருங்காட்சியகத்தின் முதல் காப்பாட்சியர். சங்காலியா,தவ்லிகர், நரசிம்மய்யா போன்ற தொல்லியல் அறிஞர்களுடன் பழைய ஒருங்கிணைந்தசேலம் மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள மேற்கொண்டவர். திரு. துரைசாமிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்தவர். திரு. நிசாதுதீன் அகமது தொல் பழங்காலம் மற்றும் நாணயவியலிலும்

தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது: இலவசத்தால் வந்த பலன்

தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.


தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென