Monday, March 17, 2008

மாஞ்சோலை

மாஞ்சோலை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் அற்புதமான சுற்றுலாத்தளம். கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1162 மீட்டர் உயரத்தில், திருநெல்வேலி நகரிலிருந்து 57 கி. மீ. தொலைவில் உள்ள இயற்கையின் கொடை. ஊட்டி, நகர சந்தடிகள் இன்றி இருந்தால் எப்படி இருக்குமோ அதுதான் மாஞ்சோலை. திருநெல்வேலி நகரிலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு மாஞ்சோலை செல்லும் பேருந்து புறப்படும். மனித வாசனை அறியாத காடுகள், ரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள், டீ ஈஸ்டட்டில் வேலை செய்யும் பழங்குடிகள், இவற்றுடன் மேற்குத் தொடர்ச்சி மலையின் குளுமையும் இணைந்து மனதை கொள்ளை கொள்ளும் இடம் !

மாஞ்சோலையின் அழகை பருக(நண்பர் முத்து ஷன்முகதிற்கு நன்றி! )

திருநெல்வேலி மாவட்ட இணையதளத்திற்கு செல்ல